சிறுமிகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய முதியவர் கைது!!

1252

child

சிறுமிகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றத்தின் பேரில் விந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை தோட்ட மிடில் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் பம்பரகலை தோட்ட மிடில் பிரிவைச் சேர்ந்த முத்துசாமி செல்லையா (வயது 67) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 4 வயது மற்றும் 6 வயதுடைய இரு சிறுமிகளையே அவர் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை விந்துலை பொலிஸார் நேற்று இரவு கைது செய்ததுடன் இன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு சிறுமிகள் இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர் குறித்த இரு சிறுமிகளையும் மாடுகள் வளர்க்கும் தொழுவத்திற்கு அழைத்து சென்றே இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.