வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய நுழைவாயில் திறப்பு விழா, சாதனையாளர் கெளரவிப்பு!!

1334

 
வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தின் அலங்கார நுழைவாயில் திறப்பு விழாவும், சாதனையாளர்கள் கெளரவிப்பும் நேற்று (08.09.2016 வியாழக்கிழமை வித்தியாலய முதல்வர் திருமதி எம்.எ.மோகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வின் முதல் நிகழ்வாக பிரதம அதிதியாக கலந்து கொண்ட புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் அலங்கார நுழைவாயில் திறந்துவைக்கப்பட்டது.

தொடர்ந்து குறித்த பாடசாலை மற்றும் அயல் பாடசாலைகளில் கல்வி கற்று தரம் 5 புலமைப்பரிசில், மற்றும் க.பொ.த(சா/த) பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட திருநாவற்குளம் கிராம மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய சாரணர் துருப்பில் முதல் ஜனாதிபதி விருதினை பெற்றுக்கொண்ட மாணவனும், வவுனியா மாவட்டத்தின் 44 ஆவது ஜனாதிபதி சாரணனுமான செல்வன் பிரான்சிஸ் கெர்சோன் அவர்களிற்கு புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் அதிதிகள் முன்னிலையில் வைத்து கெளரவிப்பு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் சிறப்பு அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் திரு கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களும் கெளரவ அதிதிகளாக வவுனியா தெற்கு கல்வி வலய பணிப்பாளர் திரு மு.இராதாகிருஷ்ணன், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), பாடசாலை மேம்பாட்டுத் திட்ட வலய பிரதிநிதி திருமதி உபுல் சுஜாதா ஆகியோருடன் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

1 img_8716 img_8719 img_8720 img_8721 img_8744 img_8748 img_8770 img_8774 img_8779 img_8780 img_8782 img_8787 img_8796 img_8803 img_8812 img_8815 img_8818 img_8819 img_8821 img_8838 img_8840 img_8842 img_8845 img_8848 img_8856 img_8880 img_8887