சம்பூர் 4வயதுச் சிறுமி கொலை தொடர்பில் 16வயது இளைஞன் கைது!!

901

m1

திருகோணமலை, சம்பூரில் இடம்பெற்ற சிறுமியின் கொலை தொடர்பில் 16 வயதான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிறுமி நேற்று காட்டுப் பகுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தநிலையில் கொலை என்று சந்தேகிக்கப்படும் இந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த 16வயதான ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காட்டுப் பகுதியில் ஒழிந்திருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.