வவுனியா இறம்பைக்குளம் பகுதியிலுள்ள முன்பள்ளிக்கு முன்பாக முன்பள்ளி மாணவர்கள் செல்லும் பாதையில் கனரக வாகனம் தரித்து நிற்பதாகவும் குறிப்பாக பாடசாலை நேரத்தில் காலை பிற்பகல் போன்ற நேரத்தில் தரித்து நிற்பதால் மாணவர்களை அழைத்துச் செல்ல வரும் பெற்றோர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் பெரிதும் அசௌகரியங்களை எதிர் கொள்வதாகவும் அவ்விடத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாதகவும் சில சமயங்கள் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் முன்பள்ளி பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்விடத்தில் வாகனங்கள் தரித்து நின்று பொருட்களை ஏற்றி இறக்கிச் செல்வதால் அப்பகுதியில் விபத்து ஏற்படவாய்ப்புக்கள் இருப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வவுனியா வர்த்தக சங்க செயலாளரிடம் முறையிட்டபோது சாரதிகளின் அசமந்தப் போக்கு காரணமாகவே இச் செயற்பாடு இடம்பெற்று வருவதாதகவும் சாரதிகளுக்கு வாகனங்கள் எங்கே நிறுத்துவது என்று தெரிவதில்லை, சாரிதிகள் வழிப்புணர்வுடன் செயற்பட்டால் மட்டுமே இவற்றை தடுக்க முடியும் என்று தெரிவித்தார்.
முன்பள்ளியின் இயக்குநரும் பல தடவைகள் சாரதிகளிடமும் அப்பகுதியில் இயங்கும் தனியார் நிலையத்தினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோதும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரியவருகின்றது.









