வேலணை வடக்கு இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பஞ்சதள இராஜகோபுர மகா கும்பாபிசேகம்!!(படங்கள்,வீடியோ)

832

ஈழவள  நாட்டில் வடபால்  யாழ் வேலணை தீபகற்பத்தில் இலந்தைவன திவ்விய திருத்தலத்தில்திருவருள் பாலித்து வரும் ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானுக்கும்  விநாயகர் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்குமான மகா கும்பாபிசேகமும் பஞ்சதள இராஜகோபுர கலச கும்பாபிசேகமும்  நேற்று 08.09.2016 வியாழகிழமை காலை  இடம்பெற்றது.

மேற்படி ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வுகள் வாமதேவ சிவாச்சாரியார்  சிவஸ்ரீ .ந.பாலசுப்ரமணிய குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி ஆலய கும்பாபிசேகத்தில்  வேலணை பிரதேசத்தை  சேர்ந்த உள்ளூர்  மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் விநாயகபெருமானின் அடியவர்கள்   நூற்றுக்கணக்கானோர்  கலந்து கொண்டனர்!

ஆலயத்தின்  கும்பாபிசேகத்தை  முன்னிட்டு கண்டியிலிருந்து  வருகை தந்த 22  வயதுடைய  காஞ்சனா என்கிற பெண்யானை  கும்பாபிசேக கிரியை நிகழ்வுகள்  முழுவதிலும்  நான்கு  நாட்களும் பங்குபற்றியதுடன் வேலணை பிரதேத்தில் உள்ள ஆலயங்களிலும்  வழிபாட்டினை மேற்கொண்டது.

படங்கள் :கஜன்

 

dsc07017 dsc07039 dsc07174 dsc07188 dsc07189 dsc07200 dsc07218 dsc07221 dsc07226 dsc07231 dsc07232 dsc07238 dsc07239 dsc07249 dsc07261 dsc07263 dsc07264 dsc07265 dsc07268 dsc07269 dsc07271 dsc07273 dsc07275 dsc07276 dsc07278 dsc07280 dsc07284 dsc07287 dsc07299 dsc07304 dsc07306 dsc07308 dsc07313 dsc07315 dsc07317 dsc07318 dsc07325 dsc07327 dsc07328 dsc07330 dsc07334 dsc07336 dsc07339 dsc07341 dsc07348 dsc07357 dsc07360 dsc07363