விராத் கோலிக்கு அர்ஜுனா விருது!!

297

kholi

இந்திய விளையாட்டு வீரர்களை கௌரவப்படுத்தும் வகையில் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை வீரர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருதினை துப்பாக்கி சுடுதல் வீரர் ரஞ்சன் சோதிக்கு பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார்.

மேலும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளிட்ட 14 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. வீரர்,வீராங்கனைகள், பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

உலகக் கிண்ண துப்பாக்கி சுடுதலில் தொடர்ந்து இரு முறை தங்கம் வென்றவரான ரஞ்சன் சோதிக்கு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுடன் 7.5 இலட்சம் இந்திய ரூபா, பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நட்சத்திர வீரரான விராத் கோலி உட்பட 14 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டன. இந்த விருதுடன் 5 இலட்சம், பட்டயம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

ரஞ்சன் சோதிக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டதை அடுத்து, இவ்விருதை பெற்ற 7 வது துப்பாக்கி சுடும் வீரர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார் என்பதும் இவ்விருது தொடர்ந்து மூன்றாவது வருடமாக ஒரு துப்பாக்கி சுடும் வீரருக்கு வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.