தந்தை மகன் உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை!!

548

hummer

நபர் ஒருவரை கொலை செய்த குற்றவாளிகள் மூன்று பேருக்கு நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

13 வருடங்களுக்கு முன்றர் இடம்பெற்ற கொலை ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக இணங்காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் உறவுக்கார மகன் ஆகிய மூவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ம் திகதி தலவாக்கலை, டயகம பிரதேசத்தில் 37 வயதுடைய ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பாக அதே பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மூன்று நபர்களுக்கும் எதிராக நுவரெலிய மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால் மூவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி லலித் ஏக்கநாயக்க தீர்ப்பளித்தார்.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 60 வயது, 37 வயது மற்றும் 32 வயதுடைய மூவர் என்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.