அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் ஸிக்கா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 100 நுளம்புகளை போத்தலொன்றில் அடைத்து பாராளுமன்றத்திற்கு எடுத்துச்சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஃப்ளோரிடா மாகாணத்தில் ஸிக்கா வைரஸின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதாகவும் இதுவரையில் அரசு சார்பில் நோய் பரவலைத் தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாததைத் தாம் கண்டிப்பதாகவும் குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான டேவிட் ஜோலி குறிப்பிட்டுள்ளார்.
ஸிக்கா வைரஸைப் பரப்பும் 100 நுளம்புகளைப் பிடித்து போத்தலில் அடைத்து பாராளுமன்றம் சென்ற டேவிட் ஜோலி, நிலைமையின் தீவிரத்தையும் அச்சுறுத்தலையும் உணர்த்தவே தாம் இந்த வழிமுறையைக் கையாண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.






