டெண்டுல்கர் தொடர்ந்து விளையாட வேண்டும் : கிறிஸ் கெய்ன்ஸ்!!

314

Sachin-tendulkar

கிரிக்கெட்டின் ககாப்தம் என்று அழைக்கப்படுபவர் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளை படைத்த அவர் கடந்த டிசம்பர் மாதம் ஒய்வு பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என்று அறிவித்து இருந்தார். இந்திய அணி நவம்பர் மாதம் தென்னாபிரிக்கா செல்கிறது.

இந்த சுற்றுப் பயணத்தில் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்டில் விளையாடி சாதனை படைக்க இருக்கிறார். இந்த டெஸ்ட் தொடரோடு டெண்டுல்கர் ஒய்வு பெறலாம். என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அவரும் அதே மனநிலையில்தான் உள்ளார்.

இந்த நிலையில் டெண்டுல்கர் மேலும் ஒரு ஆண்டு விளையாட வேண்டும் என்று நியூசிலாந்து முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் கிறிஸ்கெய்ன்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்திய அணியில் டெண்டுல்கர் இடம்பெற்று இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அனுபவம் வாய்ந்த வீரராக அவர் மட்டுமே உள்ளார். கங்குலி, டிராவிட், லட்சுமண் ஒய்வுக்கு பிறகு டெண்டுல்கர் மட்டும் அணிக்கு இருக்கிறார்.

நடு வரிசையில் வீராத் கோலி, புஜாராவுக்கு இன்னும் அதிகமான அனுபவம் தேவைப்படுகிறது. இதனால் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் டெண்டுல்கர் மேலும் ஒரு ஆண்டு விளையாட வேண்டும் என்று கிறிஸ்கெய்ன்ஸ் கூறியுள்ளார்.