மது போதையில் மரம் கைது!!

427

tree

பிரித்தானிய இராணுவ அதிகாரியொருவர் மது அருந்திய நிலையில், மரமொன்றை கைது செய்ய உத்தரவிட்டமையால் குறித்த மரம் 118 வருடங்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. குறித்த மரம் பாகிஸ்தானில் காணப்படுகின்றது.

பிரித்தானிய ஆட்சியில் இந்தியா இருந்த காலத்தில், 1898 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஸ்குய்ட் எனும் பிரித்தானிய இராணுவ அதிகாரியே அம்மரத்தினை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதிக மதுபோதையில் காணப்பட்ட குறித்த இராணுவ அதிகாரி மரம் நகர்ந்து செல்வதாக கூறி அம்மரத்தினை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதையடுத்து, அம்மரம் தரையுடன் சங்கிலியால் தரையுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

குறித்த மரம் இன்னும் தரையுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டவாறு காணப்படுகின்றது.