புத்தளத்தில் காணாமற்போன 4 வயது பிள்ளை பொலிஸாரால் மீட்பு!!

961

kidnapping

புத்தளம் வான வீதி பகுதியில் காணாமற் போயிருந்த நான்கு வயது பிள்ளையை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வண்ணாத்திவில்லு பகுதியிலிருந்து முச்சக்கர வண்டி மூலம் பிள்ளையை புத்தளத்திற்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த போதே மீட்டெடுத்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்திய பிரஜை ஒருவரே இந்த பிள்ளையை அழைத்துச் சென்றுள்ளார்.

குறிப்பிட்ட இந்திய பிரஜை உட்பட பிள்ளையை அழைத்துச் சென்ற இரண்டு பெண்களும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய முச்சக்கர வண்டி சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களான பெண்கள் இருவரும், இந்திய பிரஜையும் வண்ணாத்திவில்லு பகுதியில் பிள்ளையை மறைத்து வைத்திருந்தமை ஆரம்பக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரதேசத்திலுள்ள பெண்ணொருவரால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் சந்தேகநபரான இரண்டு பெண்களையும் முதலில் கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர்களான இரண்டு பெண்களில் ஒருவரது கணவரான இந்திய பிரஜை, முச்சக்கர வண்டி மூலம் பிள்ளையை புத்தளத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.

இந்த சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பாதுகாப்புடன் மீட்கப்பட்ட பிள்ளை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.