வவுனியா மரக்காரம்பளை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மணிபுரம் கிராமத்தில் நேற்று காலை ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் காணமல்போன மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் புஷ்பராசா(36) என்பவர் நேற்று (11.09.2016) காலை வவுனியா மணிபுரத்தில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த திடீர் மரண வீசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சடலத்திற்கு அருகாமையில் கையடக்கதொலைபேசி , மதுபான போத்தல்களும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.












