இணையத்தள குற்றச்செயல்கள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் பதிவு!!

704

crime

இணையத்தள குற்றச்செயல்கள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் பதிவு
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இணையத்தளம் தொடர்பான குற்றச்செயல்கள் தொடர்பில் 1570 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணணி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணணி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியிலாளர் ரொஷான் சந்திகுப்த குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் வேறொருவரின் நிழற்படங்கள் மற்றும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி கணக்குகள் மூலம் அதிக முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பேஸ்புக் கணக்கை தொடர்ந்தும் பயன்படுத்துவதாயின், தேவையான நிழற்படங்களை மாத்திரம் பதிவேற்றுமாறும் அதனை, நண்பர்கள் மாத்திரம் பார்வையிடும் வகையில் செயற்படுத்திக் கொள்ளுமாறும் இலங்கை கணணி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியிலாளர் மேலும் கூறியுள்ளார்.