தனது காதலனை பழிவாங்குவதற்காக காதலனின் காரை தீக்கிரையாக்குவதற்கு தீர்மானித்த யுவதி ஒருவர் தவறுதலாக மற்றொருவரின் காருக்குத் தீ வைத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான கார்மேன் சாம்ப்ளீ எனும் இந்த யுவதி கடந்த மாதம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்குத் தீ மூட்டினார்.
அக் காரின் உரிமையாளரான தோமஸ் ஜென்னிங்ஸ் என்பவருக்கு அவருடன் ஒரே அறையில் வசிக்கும் நபர் ஒருவர் மூலம் இத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் ஓடிச்சென்று தீயை அணைக்க முற்பட்டபோதும் உடனடியாக அது சாத்தியமாகவில்லை.
கண்காணிப்புக் கமராக்களை ஆராய்ந்தபோது யுவதி ஒருவர் காருக்குத் தீவைத்துவிட்டு சைக்கிளில் தப்பிச்செல்வது தெரியவந்தது.
அதையடுத்து மேற்படி யுவதியை பொலிஸார் கைது செய்தனர். கார்மேன் சாம்ப்ளீ (19) எனும் இந்த யுவதி யிடம் இது தொடர்பாக விசாரித்தபோது, தன க்கும் காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து, காதலனை பழிவாங்குவதற்காக அவரின் காரை தீக்கிரையாக்குவதற்கு தான் தீர்மானித்ததாக கூறினார்.
மற்றவர்களின் சொத்துகளை தீக்கிரையாக்கிய குற்றச்சாட்டில் கார்மேன் சாம்ப்ளீ விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.