காதலனைப் பழிவாங்குதற்குத் காதலி செய்த காரியம்!!

314

c1

தனது காத­லனை பழி­வாங்­கு­வ­தற்­காக காத­லனின் காரை தீக்­கி­ரை­யாக்­கு­வ­தற்கு தீர்­மா­னித்த யுவதி ஒருவர் தவ­று­த­லாக மற்­றொ­ரு­வரின் காருக்குத் தீ வைத்த சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்பெற்­றுள்­ளது.

புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த 19 வய­தான கார்மேன் சாம்ப்ளீ எனும் இந்த யுவதி கடந்த மாதம் வீதியில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த கார் ஒன்­றுக்குத் தீ மூட்­டினார்.

அக் ­காரின் உரி­மை­யா­ள­ரான தோமஸ் ஜென்னிங்ஸ் என்­ப­வ­ருக்கு அவ­ருடன் ஒரே அறையில் வசிக்கும் நபர் ஒருவர் மூலம் இத்­ த­கவல் தெரி­விக்­கப்­பட்­டது. அவர்கள் இரு­வரும் ஓடிச்­சென்று தீயை அணைக்க முற்­பட்­ட­போதும் உட­ன­டி­யாக அது சாத்­தி­ய­மா­க­வில்லை.

கண்­கா­ணிப்புக் கம­ராக்­களை ஆராய்ந்­த­போது யுவதி ஒருவர் காருக்குத் தீவைத்­து­விட்டு சைக்கிளில் தப்­பிச்­செல்­வது தெரி­ய­வந்­தது.

அதை­ய­டுத்து மேற்­படி யுவ­தியை பொலிஸார் கைது செய்­தனர். கார்மேன் சாம்ப்ளீ (19) எனும் இந்த யுவ­தி ­யிடம் இது தொடர்­பாக விசா­ரித்­த­போது, தன க்கும் காத­லனுக்கும் இடையில் ஏற்­பட்ட மோத­லை­ய­டுத்து, காதலனை பழி­வாங்­கு­வ­தற்­காக அவரின் காரை தீக்­கி­ரை­யாக்­கு­வ­தற்கு தான் தீர்­மா­னித்­த­தாக கூறினார்.

மற்றவர்களின் சொத்துகளை தீக்கிரையாக்கிய குற்றச்சாட்டில் கார்மேன் சாம்ப்ளீ விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.