சிம்பாவேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!!

358

pak

சிம்பாவேக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 108 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி கண்டது.
இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

சிம்பாவேயின் ஹராரே நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களை குவித்தது.

அதிகபட்சமாக அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் 67, அஹ்மத் ஷெஸாத் 54, நசிர் ஜம்ஷெட் 38, உமர் அமின் 33 ஓட்டங்களை எடுத்தனர். சிம்பாவே தரப்பில் சதாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு 261 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிம்பாவே அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 40 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக வாலர் 48, அணித் தலைவர் டெய்லர் 26 ஓட்டங்களை எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஹபீஸ், அப்துர் ரெஹ்மான், சயீத் அஜ்மல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.