உப்புவெளி பகுதியில் இரு சிறுவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போனவர்கள் திருகோணமலை – உப்புவௌி பகுதியின் மிஹிதுபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இதன்படி, 9 வயதான சிறுமி மற்றும் 11 வயதான சிறுவன் ஒருவரும் நேற்று மாலை முதல் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.






