வவுனியா மணிபுரத்தில் நேற்று முன்தினம்(12.09.2016) இரவு 9.00 மணியளவில் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
வவுனியா மணியபுரம் பழைய வீட்டுத்திட்டத்தில் குடும்பத்தகராறு காரணமாக 21 வயது இளைஞனே நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
எனினும் அயலவரின் உதவியுடன் இவ் இளைஞன் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






