13 வயதுச் சிறுமியும் 24 வயது இளைஞனும் தற்கொலைக்கு முயற்சி!!

256

suicide2

பொகவந்தலாவ – கிவ் தோட்டத்தில் 13 வயது பாடசாலை சிறுமியும் 24 வயது இளைஞனும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். நேற்று மாலை 03.00 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கிவ்தோட்டத்தைச் சோ்ந்த 24 வயது இளைஞன் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் விசம் அருந்தியுள்ளார்.

இதனையடுத்து அவரை பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதே தோட்டத்தைச் சோ்ந்த 13 வயது பாடசாலை சிறுமி ஒருவரும், பாடசாலை விட்டு வீடு வந்தவுடன் விஷமருந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் வைபவம் ஒன்றிற்காக பாெகவந்தலாவ நகர பகுதிக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சிறுமி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்த சிறுமி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்கொலைக்கான காரணம் இதுவரையிலும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.