இலங்கையில் அதிகளவில் தற்கொலை செய்யும் ஆண்கள்!!

839

sucide

நாட்டில் ஆண்கள் தற்கொலை செய்யும் அளவு அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உலகலாவிய ரீதியிலான தற்கொலை செய்வோர் தரவுகளின் படி இலங்கை 22ம் இடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி கடந்த வருடம் நாட்டில் 3000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதோடு, அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் என பாலித்த மஹிபால சுட்டிக்காட்டியுள்ளார்.