போதைப் பொருள் விற்றதாக கூறப்படும் இலங்கைப் பெண் ஒருவர் குவைத்தில் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.
இவர் பிடிக்கப்பட்ட வேளை 600 போதைப் பொருள் மாத்திரைகளை வைத்திருந்ததாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, அழகு நிலைய முகாமையாளரான இவர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி போதைப் பொருள் விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக, இந்த விடயம் குறித்து ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்த போதைப் பொருள் மற்றும் மது ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக 30 போதைப் பொருள் மாத்திரைகளுடன் எகிப்தியப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இவர் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் இலங்கைப் பிரஜையான குறித்த பெண் பணி புரிந்த அழகு நிலையத்தை சோதனையிட்ட போது போதைப் பொருள் விற்பனை குறித்து அம்பலமாகியமை குறிப்பிடத்தக்கது.






