நிலத்தில் விழுந்தால் உடையாத கையடக்கத்தொலைபேசி திரை அறிமுகம்!!

472

phone

தொடுகை முறைமை மூலம் இயங்கும் கைய­டக்­கத்­தொ­லை­பே­சிகள் தவறி நிலத்தில் விழும் போது அவற்றின் கண்­ணாடித் திரை உடை­வதனால் பயன்­பாட்­டா­ளர்கள் அதனைச் சீர்­செய்ய பெரும் செலவை எதிர்­கொள்­வது வழ­மை­யா­க­வுள்­ளது.

இதன்­போது பல சந்­தர்ப்­பங்­களில் கைய­டக்கத் தொலை­பே­சிகள் முழு­மை­யாக செய­லி­ழந்து பாவனைக்கு உத­வாத நிலையை அடை­வதும் வழ­மை­யா­க­வுள்­ளது.

இந்­நி­லையில் மேற்­படி பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும் முக­மாக பிரித்­தா­னிய சஸெக்ஸ் பல்கலைக்­க­ழகம் மற்றும் ஒக்ஸ்­போர்ட்டை அடிப்­ப­டை­யாகக் கொண்ட எம் – ஸ்லோவ் நுண்மின் நிறு­வனம் என்­ப­வற்றைச் சேர்ந்த விஞ்­ஞா­னிகள், கீழே விழுந்தால் உடை­யாத கையடக்கத்தொலை­பேசித் திரையை உரு­வாக்­கி­யுள்­ளனர்.

தற்­போது பாவ­னை­யி­லுள்ள கைய­டக்கத் தொலை­பே­சி­களின் தொடு­கை­யு­ணர்­வு­டைய திரைகளுடன் ஒப்­பி­டு­கையில் 5 மடங்கு செலவில் உரு­வாக்­கப்­படும் இந்தத் திரை­களை 2018 ஆம் ஆண்டின் ஆரம்­பத்தில் பாவ­னைக்கு விட எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது.

இந்தத் திரையை கைய­டக்­கத்­தொ­லை­பே­சி­க­ளுக்கு மட்­டு­மல்­லாது தொலைக்­காட்­சிகள் மற்றும் டப்லட் கணி­னிகள் என்­ப­வற்­றுக்கும் பயன்­ப­டுத்த முடியும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும் தொடு­கை­யு­ணர்­வு­டைய திரைக்­கான மின்­வாய்கள் தற்­போது விலை­யு­யர்ந்த இன்­டியம் தகர ஒட்­சைட்டைப் பயன்­ப­டுத்தி உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்­நி­லையில் மேற்­படி விஞ்ஞானிகள் மனித கேசத்­துடன் ஒப்­பி­டு­கையில் 10,000 இல் ஒரு மடங்கு விட்டமுடைய வெள்ளி நுண் இணைப்பு மற்றும்

உலகின் மிகவும் மெல்லிய மூலக் கூறான கிராப்பீன் ஆகியவற்றைப் பயன்படுத்தி கலப்பு மின்வாய்களை உருவாக்கியுள்ளனர்.