வவுனியாவில் பஸ்ஸை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தால் பதற்றம்!!

233

 
இன்று (15.09.2016) காலை 6.30 மணியளவில் வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் பஸ்ஸை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா-ஆசிகுளம் வழி பேருந்து போக்குவரத்தானது தமது கிராமத்தினூடாக சீரான அளவில் சீரான நேரத்தில் பயணிப்பது இல்லையெனவும் அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அன்றாடம் பணிக்கு செல்வபவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாவதாகவும் ,

2.30 மணியளவில் பாடசாலை நிறைவடைந்ததுடன் பயணிகள், மாணவர்கள் ஏற்றிவரும் பேரூந்தானது வேறு பாதையில் பயணம் மேற்கொள்வதனால் அங்கிருந்து பல கிலோ மீற்றர் நடந்து செல்ல வேண்டியுள்ளது என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 6.30 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச் சம்பவ இடத்திற்கு தற்போது பொலிஸார் விரைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

1 news-1 news-2 news-3 news-4 news-5 news-6 news-7 news-8 news-9 news-10 news-11 news-12 news-13 news-14 news-16 news-17 news-18 news-19 news-20