சூரியவெவ, மீகஹபுர பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
23 மற்றும் 31 வயதுடைய இரண்டு பேரே உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் சடலம் சூரியவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட குரோதமே இந்த மோதலுக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கண்டி, அங்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் மூவர் காயமடைந்துள்ளனர். வர்த்தக நிலையமொன்றில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோதலை தடுப்பதற்காக சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






