ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியானது கொட்டகலை கொமர்சல் பிரதேசத்துக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உள்ளிட்ட மூவர் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்திற்கு காரணம் அதிக வேகம் எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








