நான்கு மாத குழந்தை ஒன்றை கொலை செய்த சம்பவம் ஒன்று பலாங்கொடை பகுதியில் பதிவாகியுள்ளது.
பலாங்கொடை – பித்தலவல , அடவக்வல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் நேற்று தனது 4 மாத பெண் குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரழந்த குழந்தையின் சடலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குழந்தையின் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த பெண்ணை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர் தொடர்பான மருத்துவ அறிக்கையை சம்ர்ப்பிக்குமாறும் பலாங்கொடை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வைத்தியசாலைக்கு சென்று முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து பலாங்கொடை பதில் நீதவான தேசபந்து சூரியபடபெந்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குழந்தை கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் தெரிவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.






