கைதாகி காணாமற்போயிருந்த ஹம்பாந்தோட்டை இளைஞர் பொலிஸில் சரண்!!

695

missing

ஹம்பாந்தோட்டை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது காணாமற்போயிருந்ததாகக் கூறப்பட்ட இளைஞர், பிக்கு ஒருவர் ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த இளைஞர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் நடைபெறும் ஊடக சந்திப்பில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

நெல்லைத் திருடியமைக்காக ஜி.ஜி.கயாசான் எனும் இளைஞர் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது காணாமற்போயிருந்தார்.

இந்த சம்பவத்தில் பொலிஸார் தவறிழைக்காத போதிலும், குறைபாடுகள் நிலவியுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.