4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த மேயர்!!

267

mayor

அமெரிக்க நாட்டில் 4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த முன்னாள் மேயர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஹப்பார்ட் நகர மேயராக ரிச்சார்ட் கீனம் என்பவர் கடந்த 2010 முதல் 2011 வரை பதவி வகித்துள்ளார். இந்நிலையில், இவரது வீட்டில் தங்கியிருந்து 4 வயது பெண் குழந்தையை இவர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

குழந்தையின் 4 வயது முதல் 7 வயது வரை தொடர்ந்து பாலியல் சித்ரவதைகளை செய்து வந்துள்ளார். ரிச்சார்ட்டின் சித்ரவதையை தாங்காத அச்சிறுமி அவரது மனைவியிடம் புகார் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்ட்டதும், விவகாரம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.

எனினும், ‘சிறுமி தான் தன்னை பலாத்காரம் செய்ய தூண்டியதாகவும், தன்னை முழுக்க முழுக்க ஏசுநாதரிடம் ஒப்படைத்துள்ளதாக்வும்’ ரிச்சார்ட் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆனால், ரிச்சார்ட்டின் மனைவி மூலம் அனைத்து உண்மைகளும் வெளியில் வந்ததை தொடர்ந்து அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டது.

தற்போது ரிச்சார்ட் நீதிமன்றத்தில் 75,000 டொலர் செலுத்தி பினையில் விடுதலை செய்யப்பட்டார்.

சில வாரங்களில் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது ரிச்சார்ட்டிற்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.