வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல்!!

222

 
இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று (15.09.2016) வவுனியா மாவட்ட செயலகத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார ஆகியோருக்கிடையில் இடம்பெற்றது .

காலை 10.00 மணிக்கு நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கை விமானப்படை ஆக்கிரமித்து வைத்திருக்கும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை பாடசாலை சமூகத்தினரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளரிடம் கே.கே.மஸ்தானால் கோரிக்கை வைத்ததற்கு அமைவாக பாடசாலைக்கு சொந்தமான அக்காணியை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதே நேரம் பாடசாலை மைதானத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் தெரிவித்தார்.

img_8099 img_8106 img_8107 img_8118 img_8120