மெக்ஸிக்கோவில் நடைபெற்ற ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்தபோது, 12 வயதான சிறுவனொருவன் தனியாக வீதியில் நின்று அவர்களை தடுக்க முயற்சித்துள்ளான்.
செலேயா நகரில் நடைபெற்ற இப் பேரணியில் சுமார் 11,000 பேர் கலந்துகொண்டனர். அப்போது மேற்படி சிறுவன் வீதியின் மத்தியில் நின்றுகொண்டு ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு கோரினான்.
இச் சிறுவனின் உறவினர் ஒருவரும் ஓரினச் சேர்க்கையாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சீனத் தாங்கி மனிதரை இச்
சிறுவன் நினைவுபடுத்துவதாக பலர் தெரிவித்துள்ளனர்.
1989 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள தியனமென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டமொன்றை அடக்க வந்த இராணுவத் தாங்கிகளுக்கு குறுக்காக நபர் ஒருவர் தனியாக நின்று எதிர்ப்புத் தெரிவித்தார்.
“தாங்கி மனிதர்” எனக் குறிப்பிடப்படும் அந் நபர் யார் என்பதோ அவருக்கு என்ன நடந்தது என்பதோ இதுவரைத் தெரியவில்லை.