11,000 பேரின் ஆர்ப்பாட்டப் பேரணியை தனியாக தடுக்க முயன்ற சிறுவன்!!

343

boy

மெக்­ஸிக்­கோவில் நடை­பெற்ற ஓரினச் சேர்க்­கை­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்டப் பேர­ணியில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் திரண்டு வந்­த­போது, 12 வய­தான சிறுவனொருவன் தனி­யாக வீதியில் நின்று அவர்­களை தடுக்க முயற்­சித்­துள்ளான்.

செலேயா நகரில் நடை­பெற்ற இப்­ பே­ர­ணியில் சுமார் 11,000 பேர் கலந்­து­கொண்­டனர். அப்­போது மேற்­படி சிறுவன் வீதியின் மத்­தியில் நின்­று­கொண்டு ஆர்ப்­பாட்­டத்தை நிறுத்­து­மாறு கோரினான்.

இச் ­சி­று­வனின் உற­வினர் ஒரு­வரும் ஓரினச் சேர்க்­கை­யாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சீனத் தாங்கி மனி­தரை இச்
சி­றுவன் நினை­வு­ப­டுத்­து­வ­தாக பலர் தெரி­வி­த்துள்­ளனர்.

1989 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நக­ரி­லுள்ள திய­னமென் சதுக்­கத்தில் ஆர்ப்பாட்ட­மொன்றை அடக்க வந்த இரா­ணுவத் தாங்­கி­க­ளுக்கு குறுக்­காக நபர் ஒருவர் தனி­யாக நின்று எதிர்ப்புத் தெரி­வித்தார்.

“தாங்கி மனிதர்” எனக் குறிப்­பி­டப்­படும் அந் நபர் யார் என்பதோ அவருக்கு என்ன நடந்தது என்பதோ இதுவரைத் தெரியவில்லை.