தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் சிங்க தம்பதிக்கு மூன்று குட்டிகள் பிரசவம்!!

613

lion

தெஹி­வளை தேசிய மிரு­கக்­ காட்­சி­சா­லையில் மூன்று சிங்­கக்­ குட்­டி கள் பிறந்துள்ளன. விலங்கு பரி­மாற்ற திட்­டத்தின் கீழ் ஜேர்­ம­னியின் ஹெகன்பெக் மிரு­கக்­ காட்­சி­சாலை மற்றும் தென்­ கொ­ரி­யாவின் ஷியோல் மிரு­கக்­ காட்­சி­சாலை ஆகியவற்றினால் இரு சிங்­கங்கள் தெஹி­வளை மிரு­கக்­ காட்­சி­சா­லைக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

இவ்­வாறு பெறப்­பட்ட தாய் சிங்­கத்­துக்கு சகீனா எனவும் தந்தை சிங்­கத்­துக்கு தோர் எனவும் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இந்த சிங்க தம்­ப­திக்கே இம்­ மூன்று சிங்­கக்­குட்­டி­களும் பிறந்­துள்­ளன.

ஆகஸ்ட் 28ஆம் திகதி பிறந்த இந்த மூன்று சிங்­கக் ­குட்­டி­களும் சிறந்த தேகாரோக்கியத்­துடன் காணப்­ப­டு­வ­தாக தேசிய மிரு­கக் ­காட்­சி­சாலை திணைக்களத்தின் பதில் பணிப்­பாளர் நாயகம் தம்­மிகா மல்­சிங்க தெரி­வித்­துள்ளார்.

மேலும் இதற்கு முன்பு இத்­ தம்­ப­திக்கு பிறந்த சிங்­கக்­ குட்­டிக்கு அதன் தாய் பாலூட்டுதற்கு மறுப்பு தெரி­வித்து வந்­தி­ருந்­த­தா­கவும் ஆனால், தற்­போது பிறந்­துள்ள குட்டிகளுக்கு தாய் சிங்கம் விருப்பத்துடன் பாலூட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.