மாயமான மலேசிய எம்.எச்.370 விமானத்தினுடைய இறக்கை தான்சானியா தீவு ஒன்றில் கரையொதுங்கியுள்ளதாக அவுஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்தில் தான்சானியாவின் பெம்பா தீவுகளில் கடற்கரையில் ஒதுங்கிய இந்த உதிரிப்பாகத்தை அருகிலிருந்த குடியிருப்பு வாசிகள் அடையாளம் கண்டனர்.
இந்நிலையில் அங்கு விரைந்து ஆராய்ச்சிக்கு உட்படுத்திய அவுஸ்ரேலியா போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள், இந்த பாகம் எம்.எச்.370 விமானத்தினுடையதே என உறுதிப்படுத்தினர்.
கடந்த 2014, மார்ச் மாதம் 8ம் திகதி உலகை உலுக்கிய அன்றைய தினத்திலிருந்து இந்தியப் பெருங்கடலின் பல்வேறு கடற்கரைகளில் சில பாகங்கள் ஒதுங்கியது. அவை மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று சந்தேக அளவில் இருந்து வருகிறது.
எனினும் அவை எதுவும் இதுவரை உறுதியாக மலேசிய விமானத்தின் பாகம் தானா என்று கூற முடியவில்லை.
இந்நிலையில் தற்போது மீட்கப்பட்ட இந்த இறக்கை உதிரிபாகத்துடன் சேர்த்து மொத்தம் 5 உதிரிபாகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த ஆண்டு மடகாஸ்கர் ரீயூனியன் தீவுகளில் ஒதுங்கிய இன்னொரு இறக்கை போன்ற பாகம் எம்.எச். 370 விமானத்தைச் சேர்ந்தது என்று பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதைப் போன்று இன்று மீட்டு இருக்கும் இந்த புதிய உதிரிபாகம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. எவ்வாறெனினும் மலேசிய விமானம் மாயனமான விடையம் இன்னமும் மக்கள் மனதில் புதிறாகவே மாறிப்போயிருக்கின்றன.






