தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர், மனோ கணேசன் நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது ரயில் நிலையத்தில் உள்ள பெயர்ப்பலகைகள் மற்றும் தமிழ் அறிவித்தலில் உள்ள பிழைகளை அவதானித்து அதனைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மனோ கணேசன் அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.