வவுனியாவில் கா.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான விசேட பயிற்சி நிகழ்வு!!

345

 
வவுனியா மாவட்ட கா.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான விசேட கல்வி பயிற்ச்சி நிகழ்வு ஒன்று நேற்று (16.09.2016)காலை 10.00 மணிக்கு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் போவில் மண்டபத்தில் கலாநிதி கரதடியன குணரத்தின தேரர் தலைமையில் நடைபெற்று நடைபெற்றது.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் பங்கு பெறும் இவ் பயிற்ச்சி நிகழ்வினை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வன்னி மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் ஆங்கிலம்,கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பயிற்ச்சி வகுப்பிற்கு மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

இக்கல்வி பயிற்சி நெறிக்கான அனுசரணையை சிங்கப்பூரை சேர்ந்த ‘புத்த மகா கருண அறக்கட்டளை’ நிறுவனம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

img_8648 img_8652 img_8653 img_8658 img_8690 img_8699 img_8704 img_8707 img_8708 img_8717 img_8719 img_8724 img_8729