வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புபட்ட ஆறு பேரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்த பெறுமதியான நகைகளையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியாவில் பல்வேறு பகுதிகளிலுள்ள வீட்டில் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஆறு பேரை பொலிசார் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து திருடிய பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 5ம் திகதியிலிருந்து 10ம் திகதிவரை குறித்த ஆறு பேரினால் திருடப்பட்ட 12பவுண் தங்க நகைகளையும் பொலிசார் இவர்களிடமிருந்து மீட்டுள்ளனர்.
திருடப்பட்ட தங்க நகைகளை மன்னார், வவுனியா, குருணாகல் போன்ற பகுதிகளில் விற்பனை செய்தபோது குறித்த இரண்டு நபரைக் கைது செய்து மேற்கொண்ட விசாரணையின் பின்னர் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 14நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நால்வரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தள்ளனர்.
குறித்த நபர்கள் தோணிக்கல், மதவுவைத்தகுளம் போன்ற பகுதிகளில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
குறித்த நபர்களை கைது செய்வதற்கு வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு தேசபந்து தென்னக்கோன் தலைமையில் சிறப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டதுடன் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்ணாண்டோ, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிசிற குமார, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி ஆலோசனையில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி செனரத் தலைமையிலான சாஜன் ஜேசுதாசன் 42521, அபேரத்தினா 50955, எஸ். ஜ. ரத்ணாயக்கா, சிசில் குமார 23298, அடங்கிய குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இவர்களைக் கைது செய்ய முடிந்துள்ளதாகவும் தெரிவித்தள்ளனர்.