தாதிய சகோதரி சேவையிலிருந்து ஒய்வு பெற்ற வசந்தாதேவி திருக்கேதீஸ்வரன் அவர்களின் பிரிவு உபசாரம் வவுனியா வைத்தியசாலை மாநாட்டு மண்டபத்தில் தாதிய பரிபாலகர் ம.பாலநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ம.அகிலேந்திரன், பொது வைத்திய நிபுணர் ம.சிவராமன், பொது வைத்திய அதிகாரி திருமதி.அருட்செல்வம், பொது வைத்திய நிபுணர் நிசாந்தினி மற்றும் தாதிய கல்லூரி அதிபர் மருத்துவத்துறை உத்தியோகத்தர்கள் தாதியரகள் கலந்து கொண்டு சேவை நலன் பாராட்டை வாழ்த்தினர்.