பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை!!

508

hang

நீதிமன்ற பிடியாணையின் பிரகாரம் கைது செய்யப்பட்டு புசல்லாவை பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபர் குற்றச் செயல் ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு தாக்கல் செய்யபட்டு நீதிமன்றுக்கு அழைக்கபட்டிருந்தார். அவ்வழக்கிற்கு குறித்த நேரத்திற்கு சமூகம் தராததால், நீதிமன்றினால் பிடி ஆணை பிறப்பிக்கபட்டிருந்தது.

அதன்படி, குறித்த சந்தேகநபர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், 28 வயதான ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் பொலிஸ் காவலில் இருந்த நிலையில் தனது மேற்சட்டையால் கழுத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்போது, சந்தேகநபரின் சடலம் புசல்லாவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பாக புசல்லாவை பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.