புருனே நாட்டு இளவரசி, நடிகர் அஜித்தை சந்திக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரான அரண்மனை புருனேவில்தான் உள்ளது. புருனே மன்னர்களும் இளவரசர்களும் ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள்.
கடந்த வாரம், அந்த அரண்மனையில் வெளிநாட்டு வைர முதலாளிகளுக்கு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பல நாட்டைச் சேர்ந்த குத்து பாடல்கள் இசைக்கப்பட்டு எல்லோரும் நடனமாடியுள்ளார்கள்.
அப்போது வேதாளம் படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ பாடல் இசைக்கப்பட்டது. அதைக்கேட்டு அனைவரும் உற்சாகமாக நடனமாடியுள்ளார்கள்.
அந்தப் பாடலைக் கேட்டு அசந்து போன புருனே இளவரசி, தனது மெய்க்காப்பாளர்களை அழைத்து, அந்தப் பாடல் பற்றிய விபரங்களைக் கேட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, அஜித்தின் விபரங்கள், புகைப்படங்கள் மற்றும் அவர் நடித்த திரைப்படங்களை சேகரித்து அவரிடம் கொடுத்துள்ளனர்.
அதையெல்லாம் பார்த்து அசந்துபோன இளவரசி, ”என்ன அழகு.. என்ன கம்பீரம்.. சிரிக்கும் போது மனதை அள்ளுகிறார்.. அவரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்று உருகினாராம்.
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் பிரெட்லீ, அஜித்தை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






