ஜோதிடருக்கு விசர் பிடித்து விட்டது நாட்டின் தலைவன் நான் என்னை பயமுறுத்த முடியாது!!

1078

maithripala

தனது கிரகநிலை மிகவும் மோசமாக இருப்பதாக சில ஜோதிடர்கள் கூறியிருந்தாலும் அவற்றை கூறி என்னை பயமுறுத்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொட பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர், அமைச்சர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

இன்னும் 5 மாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிச்சயம் இறந்து விடுவார் என ஜோதிடரான விஜித் ரோஹன விஜேமுனி வெளியிட்டிருந்த ஆருடம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“ரோஹன விஜேமுனிக்கு விசர் பிடித்துள்ளது. எனது கிரக நிலை மிக மோசமாக இருப்பதாக அவர் சில இணையத்தளங்களில் கூறியுள்ளார். எனது கிரக நிலை அந்த அளவுக்கு மோசமாக இருக்குமாயின் நான் எப்படி நாட்டின் தலைவராக இருப்பேன். இவ்வாறானவற்றை கூறி என்னை பயமுறுத்த முடியாது” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.