மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா வவுனியாவில் நேற்று (18.09.2016) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
வவுனியா ஓமந்தையிலிருந்து ஆரம்பமான சைக்கிள் ஓட்டப் போட்டியை வடமாகாண சுகாதார அமைச்சர் ஆரம்பித்து வைத்திருந்தார்.
நேற்று காலைமுதல் ஆரம்பமான விளையாட்டு விழா வவுனியா நகர சபை மைதானத்தில் பிற்பகல் வரை சிறப்பாக இடம்பெற்றது.
உயிரிழை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விளையாட்டு விழாவானது உடற்பாதிப்புகுட்பட்ட, உளப்பாதிப்புக்குட்பட்ட பல வகைப்பட்ட மாற்றுத் திறனாளிகள் இந்த விழாவில் களமிறங்கியிருந்தனர்.
இந்தப் போட்டிகளில், வட மாகாணத்தில் வாழும் மாற்றுத் திறனாளிகள் பெரும் ஆர்வத்தோடு கலந்துகொண்டதுடன், அவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றமையும் ஆண் பெண் மற்றும் வயது வேறுபாடின்றி ஆர்வத்துடன் மாற்று திறனாளிகள் பங்குபற்றியதுடன் இவர்களுக்கு ஆதரவாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ்மாற்று திறனாளிகளும் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.