வவுனியா 1ம் ஒழுங்கை விநாயகபுரம் பாரதிபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரகுமார் சதீஸ் என்பவரே சவுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வவுனியா விநாயகபுரம் பாரதிபுரத்தைச் சொத்த இடமாகக்கொண்ட சதீஸ் என்பவர் வயது(24) கடந்த ஆண்டில் இருந்து சவுதிஅரேபியாவின் ரியாத் என்னும் இடத்தில் சாரதியாக கடமையாற்றிவந்தார்.
இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.09.2016)அன்று இலங்கை நேரம் அதிகாலை 5.30 மணியளவில் அவர் தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் இவரது சடலத்தை இலங்கைக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் முகநூல் காதல் விவகாரத்தால் இவ் இளைஞன் தற்கொலை செய்துகொண்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.







