யாழில் நடைபெறும் மாகாணமட்ட தடகள போட்டிகளில் நேற்று (19.09.2016) இடம்பெற்ற ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த தடகள வீரர் நவநீதன்15 நிமிடங்கள் 15 செக்கன்கள் 05 மில்லிசெக்கன்களில் ஓடிமுடித்து புதிய சாதனை ஒன்றை படைத்து தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
வட்டுகோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் நேற்று (19.09.2016) இடம்பெற்ற ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட நவநீதன் மேற்படி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
2013இல் யாழ்மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட ரி.தேவராசா 16 நிமிடங்கள் 19 செக்கன்கள் 08 மில்லிசெக்கன்களில் இலக்கை அடைந்து படைத்திருந்த சாதனையை வவுனியா வீரர் நவநீதன் நேற்றைய தினம் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்றையபோட்டியில் முல்லைதீவு மாவட்டத்தை சேர்ந்த பி .ஜெயந்தன் வெள்ளிப் பதக்கத்தையும் கிளிநொச்சி மாவட்ட வீரர் எஸ்.விதுர்சன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுகொண்டனர்.






