இலங்கையில் இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்களில் அதிகமாக சிறுவர்களே பாதிக்கப்படுவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் திணைக்கள சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்களைப் பார்க்கும் போது 90 சதவீத துஷ்பிரயோக சம்பவங்கள் சிறுவரின் உறவினர்கள் அல்லது அயலவர்களால் இடம்பெறுவதாகவும் மனோஜ் சமரசேகர தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெறும் அதிகமான துஷ்பிரயோக சம்பவங்களில் அதிகமானவை பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது வேறு பொறுப்பான நிறுவனத்துக்கோ அறிவிக்கப்படுவதில்லை என்றும்அவர் தெரிவித்தார்.






