இங்கிலாந்தில் நேற்று முன்தினம் கடலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி யொன்று நடத்தப்பட்டது. இங்கிலாந்து பிரதான நிலப்பரப்புக்கும் இங்கிலாந்தின் தென் பகுதியிலுள்ள வைட் தீவுக்கும் இடையிலான கடற்பகுதியிலுள்ள மணல் திட்டில் இப்போட்டி நடைபெற்றது.
ஐலன்ட் செய்லிங் கிளப் மற்றும் ரோயல் சதர்ன் யாட்ச் கிளப் ஆகிய அணிகள் இப்போட்டியில் மோதின. 50 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் ஐலன்ட் செய்லிங் கிளப் அணி வெற்றியீட்டியது.
கோடைப் பருவத்தில் இக் கடற்பகுதியில் நீர் வற்றுவதால் வெளிக்கிளம்பும் மணல் திட்டுகளில் வருடாந்தம் இக் கிரிக்கெட் போட்டி நடை பெறுகிறது. 1950களிலிருந்து இப் போட்டி நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
போட்டியாளர்களும் பார்வையாளர்களும் படகுகள் மூலம் மேற்படி மணல் திட்டுக்களை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. களத் தடுப்பாளர்கள் பலர் நீரில் நின்றுகொண்டு களத் தடுப்பில் ஈடுபட்டனர்.