யானை தாக்கி பெண் உயிரிழப்பு!!

562

dead

திருகோணமலை தோப்பூர் – தங்கபுரம் பகுதியில் யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமது வீட்டுக்கு அருகில் கிடந்த விளாம்பழங்களை சேகரிக்கச் சென்ற வேளையிலேயே முத்துலிங்கம் ஜானகியம்மா எனும் 65 வயதான பெண் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.