கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களைப் போட்டால் கைது செய்ய நடவடிக்கை!!

560

beach

கடற்கரைப் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களைப் போடும் நபர்களைக் கைது செய்வதற்கு CCTV காட்சிகளின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

கடற்கரைகளில் குப்பை போடுபவர்களுக்கு எதிராகத் தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாகவும் சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

வருடமொன்றிற்கு கடற்கரையில் 100 மெட்ரிக்தொன் குப்பை சேர்வதாக சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.