இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 07 சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், மது அருந்தி இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (22) அதிகாலை கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.







