14 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை!!

653

jail

14 வய­தான சிறு­மியை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய நப­ரொ­ருவர் குற்றவாளியாகக் காணப்­பட்­ட­தை­ய­டுத்து குளி­யாப்­பிட்­டி உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் கிஹான் எச். குல­துங்க 10 வருட கடூ­ழிய சிறைத்தண்­டனை விதித்துத் தீர்ப்­ப­ளித்தார். சிறைத்தண்­ட­னைக்கு மேல­தி­க­மாக 25,000 ரூபா அப­ரா­தமும் பாதிக்­கப்­பட்ட யுவ­திக்கு ஒரு இலட்ச ரூபா நஷ்­ட­ஈடு வழங்­கும்­ப­டியும் நீதி­ய­ரசர் உத்­த­ர­விட்டார்.

இதற்கும் மேல­தி­க­மாக முத­லா­வது குற்­றச்­சாட்­டுக்கு இரண்டு வருட கடூ­ழியச் சிறைத் தண்­ட­னையும் 5000 ரூபா அப­ரா­தமும் விதித்த நீதி­ய­ரசர், சிறைத் தண்­ட­னை­களை ஒரே­ய­டி­யாக அனு­ப­விக்க வேண்­டு­மெ­னவும் உத்­த­ர­விட்டார்.

குளி­யாப்­பிட்­டியைச் சேர்ந்த ஆர்.கே. ஜயசேகர என்ற அலவ்வே மாமா என்ற நபருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது.