தோள்ப்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த இலங்கை வேகப்பந்துவீச்சாளர் தமிங்க பிரசாத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் தமிங்க பிரசாத். இவர் கடந்த சில மாதங்களாக தோள்ப்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் அவரின் தோள்ப்பட்டை காயத்திற்கு அறுவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு ஆவலாக இருக்கிறேன். சில மணி நேரம் மட்டுமே உள்ளது. உங்களது பிராத்தனைகள் வேண்டும் என்று டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.






