வவுனியா பூவரசம்குளத்தில் ஏற்பட்ட தீப்பரம்பலினால் காடுகளுக்கு சேதம்!

912

forest8

வவுனியா பூவரசம்குளம் பகுதியில் உள்ள காட்டுபிரதேசத்தில் ஏற்பட்ட தீ பரம்பலினால் 20 ஏக்கர் பரப்பிலான காட்டுபிரதேசம் தீக்கிரையாகியுள்ளது.
நேற்று (21.09.2016) புதன்கிழமை நண்பகல் வேளையில் ஏற்பட்ட தீப்பரம்பல் தொடர்பாக பிரதேச வாசிகளால் வேளான்குளத்தில்  உள்ள இராணுவமுகாமுக்கு தகவல் தெரிவிக்கபட்டு கடும் சிரமத்தின் மத்தியில் இராணுவத்தினர் தம்முடைய தண்ணீர் பவுசர்களை நகர்த்தி மேற்படி தீயினை பிற்பகல் நான்கு மணியளவில் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். (தி)