கொள்ளையிட வந்த நபரை தேநீர் அருந்தி முடிக்கும் வரை காத்திருக்குமாறு கூறிய பெண்!!

631

Brave Karamjit Sangha who saw off an armed robber who refused to hand over cash - because she was having her cup of tea. See Ross Parry story RPYCUPPA: A shop worker told a robber who brandished a seven-inch blade at her he would have to wait as she was having a cup of tea. Drug user Stuart Gleeson hung around the Sangha newsagents in Beverley Road, Hull for several minutes before entering and demanding cash from the till. But unflustered Karamjit Sangha put down her cup of tea and waved a craft knife she was using to open the papers at him, causing him to run away.

 

பிரிட்­டனில் வசிக்கும் இந்­திய பெண்­ணொ­ருவர் தனது கடையில் கத்­திமு­னையில் கொள்­ளை­யி­டு­வ­தற்கு வந்த நபரை, தான் தேநீர் அருந்தி முடிக்கும் வரை காத்­தி­ருக்­கு­மாறு கூறி­ய­துடன் பின்னர் அந் ­ந­பரை பய­மு­றுத்தி துரத்­தி­யுள்ளார்.

49 வய­தான கரம்ஜித் சங்கா எனும் இந்த பஞ்­சாபி பெண், பிரிட்­டனின் ஹுல் நகரில் கடை­யொன்றை நடத்­து­கிறார். அண்­மையில் அவரின் கடைக்கு வந்த ஸ்டுவர்ட் கிளீசன் எனும் நபர் 7 அங்­குல நீள­மான கத்­தி­யொன்றைக் காட்டி அச்­சு­றுத்தி பணம் கொடுக்­கு­மாறு மிரட்­டினார்.

ஆனால், கரம்ஜித் சங்கா அஞ்­ச­வில்லை. மாறாக தான் தேநீர் அருந்தி முடிக்­கும்­வரை காத்­தி­ருக்­கு­மாறு ஸ்டுவர்ட் கிளீ­ச­னுக்கு கரம்ஜித் உத்­த­ர­விட்டார்.

கடந்த மே மாதம் நடை­பெற்ற இச் ­சம்­பவம் தொடர்­பான வழக்கு விசா­ரணை ஹுல் கிரவுண் நீதி­மன்றில் நடை­பெற்­றது.

இவ் ­வ­ழக்கில் சாட்­சி­ய­ம­ளித்த கரம்ஜித் சங்கா கூறு­கையில், “அந்­ நபர் கடை­யி­லுள்ள பணம் முழு­வ­தையும் தரு­மாறு கூறினார். ஆனால், நான் தேநீர் அருந்திக் கொண்­டி­ருக்­கிறேன் எனக் கூறினேன்.

தேநீர் கப்பை கீழே வைத்­து­விட்டு பணத்தை எடுத்தத் தரு­மாறு அவர் கேட்டார். நான் “சரி” எனக் கூறி­விட்டு, கத்­தி­யொன்றை எடுத்துக் காட்­டினேன். அதைக் கண்டு அந்­ நபர் ஓடி­விட்டார்.

அவரை நான் கத்­தியால் குத்­தி­யி­ருக்கப் போவ­தில்லை, எனினும், அவரை மிரட்­டு­வ­தற்கு அந்­ ந­ட­வ­டிக்கை போது­மா­ன­தாக இருந்­தது” என்றார்.

இவ் ­வ­ழக்கை விசா­ரித்த நீதிபதி, ஸ்டுவர்ட் கிளீசனுக்கு 5 வருட கால சிறைத் தண்டனை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

1 2